துளை
விழுந்த குடையொன்றுடன்
தெருவைக்
கடக்கிறேன் நான்
சிவப்பு
விளக்குக்குப் பின்னால்
எனது
நெற்றி வரிகளின் மீது
கவனத்தைச் செலுத்தும்
ஒரு
பெண்ணின் பச்சை நிறப்
பார்வை
மழை
வடிவம் கொண்டு
இந்தத்
தெருவில் கரையக்கூடியது
தொடர்ந்தும்
வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை
அந்தக் குடை இப்பொழுது
அந்தப்
பெண்ணின் கரங்களில்
அதோ
எனது குடை
-ஈரானியக் கவிஞர்
மஹ்மூத் ஃபலாகி
கவிதை
தமிழில் - எம்.ரிஷான்
ஷெரீப்
கவிஞர் மஹ்மூத் ஃபலாகி (கவிஞர் பற்றிய குறிப்பு)
தொடர்ந்து ஈரானின் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த இவர், புதிய ஆட்சியில் கவிதைகள் எழுதுவது தடை செய்யப்பட்டு, கவிஞர்களுக்கு ஆபத்தான சூழல் உருவானதால், நாட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 1986 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது பாரசீக மொழி மற்றும் இலக்கியங்கள் சம்பந்தமான விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், கவிதைகள், நாவல், புனைவு, விமர்சனங்கள் என எழுதி, இதுவரையில் கிட்டத்தட்ட 19 தொகுப்புக்களை பாரசீக மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் இதுவரையில் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.